மதபி புரி புச், முன்னாள் செபி தலைவர் மீது அடானி, ஐசிஐசிஐ, பிளாக்ஸ்டோன், எம்&எம் நிறுவனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள்: குற்றமற்றவர் – லோக்பால்
மதபி புரி புச் யார்
மதபி புரி புச் இந்தியாவின் பங்கு சந்தையை கட்டுப்படுத்தும் அரசாங்க அமைப்பான செபியின் (SEBI – Securities and Exchange Board of India) முன்னாள் தலைவராக இருந்தவர். நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் விதிகளை பின்பற்றுகிறார்களா, ஏமாற்றம் அல்லது மோசடி நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதே அவருடைய முக்கிய பொறுப்பு.
மார்ச் 2022 முதல் பிப்ரவரி 2025 வரை இந்த அதிகாரப்பூர்வ பதவியில் இருந்தார். அதற்கு முன் செபியின் முழுநேர உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
📢 புகார் என்ன சொல்கிறது?
2024 செப்டம்பரில், பாராளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா, இந்திய லோக் பாலிடம் புகார் கொடுத்தார். லோக்பாலானது ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பாகும் — உச்ச அதிகாரிகள் அதிகார தவறுகளைச் செய்கிறார்களா என்பதை அது ஆய்வு செய்கிறது.
அடானி குழுவுடன் இணைந்த முதலீடு
மதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச், ஒரு வெளிநாட்டு முதலீட்டு நிதியில் பெரும் தொகையை முதலீடு செய்ததாக கூறப்பட்டது. மாதபி பூரி புச், 2013-ல் ICICI வங்கியில் இருந்து விலகிய பிறகு, அகோரா அட்வைசரிஸ் பிரைவேட் லிமிடெட் (AAPL) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 2015-ல் அவர் மற்றும் அவரது கணவர் சுமார் 5 கோடி ரூபாயை குளோபல் டைனமிக் ஆபர்ச்சுனிட்டிஸ் ஃபண்டில் (GDOF) முதலீடு செய்தனர். இதன் முதலீட்டு அதிகாரியாக இருந்தவர் அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநர். இந்த நிதி அடானி குழுவுடன் தொடர்புடையதாக இருந்தது.அவ்வாறு இருக்கும்பொழுது செபி (புச் தலைமையில்) அடானி குழுவின் நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை நடத்தினால், அந்த விசாரனை நியாயமாக இருக்குமா ?
கேள்வி: ஒரு நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தும் பொழுது, அதே நிறுவனத்தில் சொந்தமாக முதலீடு செய்திருந்தால் , அது நியாயமா? அதுவே Conflict of Interest எனப்படும்.
💼 மதபி புரி புச் இன் ஆலோசனை நிறுவனம்
அவருடைய சொந்த நிறுவனமான அகோரா அட்வைஸரி பைவட் லிமிடெட் (Agora Advisory Pvt. Ltd.), பெரும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனம்.
ஆனால் புகாரில் கூறப்பட்டபடி, 2022–2025 காலத்தில் அந்த நிறுவனம் ₹2.95 கோடி வருமானம் ஈட்டியதாகக் கூறப்பட்டது.
கேள்வி: அரசு அதிகாரியாக பணியாற்றும் போது தனியார் நிறுவனம் நடத்த முடியுமா?
📝 அரசு விதிகளின்படி, உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் தனியார் நிறுவனம் எதுவும் நடத்த கூடாது — ஊழல் மற்றும் பிரத்தியேக விருப்பங்களைத் தவிர்க்கவே இது.
💰 quid pro quo:
புச் , மஹிந்திரா & மஹிந்திரா (M&M), பிளாக்ஸ்டோன் (Blackstone Inc.), வாக்கார்ட் (Wockhardt) ஆகிய நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை கட்டணம் மற்றும் வாடகை பெயரில் பணம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிறுவனங்களும் செபியின் கண்காணிப்புக்குட்பட்டவை.
குற்றச்சாட்டு: “நீங்கள் பணம் கொடுங்கள்; நானும் உங்களுக்கான சலுகைசெய்வேன்” என்பது போல இருந்ததாக புகார் கூறுகிறது.
📝 “Quid pro quo” என்பது லத்தீன் மொழி வார்த்தை — “நீ எதையாவது கொடு; அதற்குப் பதிலாக நானும் ஒன்றை கொடுப்பேன்” என்பதைக் குறிக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு இது சட்டத்துக்கு எதிரானது.
📈 ICICI வங்கி பங்குகள் விற்பனை: தனிப்பட்ட லாபம்?
புச் , ICICI வங்கியில் முன்னர் பணியாற்றியிருந்தார். அவருக்கு அந்த வங்கியில் ESOPs (பணியாளர்க்குக்கான பங்குகள் ) வழங்கப்பட்டிருந்தது.
2017 முதல் 2024 வரை அவை விற்கப்பட்டன.
இந்த காலப்பகுதியில் ICICI வங்கி செபியின் கண்காணிப்பில் இருந்தது.
கேள்வி: ஒரு நிறுவனத்தின் பங்குகளை, அதே நிறுவனத்தை கண்கானிக்கும் அரசு அதிகாரி அந்த சமயத்தில் விற்கலாமா?
📝 ESOPs என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றயதிற்கு அந்த நிறுவனம் அதனுடைய பங்குகளை அந்த ஊழியருக்கு கொடுப்பதாகும் . புச் கண்காணிப்பில் உள்ள நிறுவனம் தொடர்பான பங்குகளை விற்றதால் குறித்த கேள்வி .
🏛️ லோக் பாலின் முடிவு என்ன?
2025 ஆரம்பத்தில், புகாரும் ஆதாரங்களும் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, லோக் பாலின் முடிவாக:
- புகார் நிராகரிக்கப்பட்டது.லோக்பால் வெளியிட்டுள்ள 116 பக்க உத்தரவில், “எந்தவொரு தவறும் செய்யப்பட்டதற்கான ஒரு சிறு ஆதாரமும் இல்லை” மற்றும் புகார்கள் “முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என லோக்பால் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கு அதிகாரத்தின் நேர்மை, நியாயம் மற்றும் பொறுப்பீடு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இறுதியாக, லோக் பாலின் முடிவில் மதபி புக் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார். புகார்கள் போதுமான ஆதாரமில்லாதவை என்றும், அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வுகள்
- மார்ச் 2022 – புச் செபி தலைவராக நியமிக்கப்பட்டார்
- ஜனவரி 2023 – செபி Adani விசாரணை தொடங்கியது
- செப்டம்பர் 2024 – லோக் பாலிடம் புகார்
- அக்டோபர்–டிசம்பர் 2024 – பொதுவெளியில் விவாதம்
- பிப்ரவரி 2025 – லோக் பாலின் தீர்ப்பு
- மார்ச் 2025 – புக் செபி பதவியில் இருந்து விலகினார்